கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர்.!

Published by
மணிகண்டன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த கொரோனா வைரஸால் சில முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டனர். இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது 2 வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இதையெடுத்து போரிஸ் ஜான்சன்  தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டு அரசு பணிகளையும் கவனித்து வந்தார்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி லண்டன் செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மறுநாள் உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதையெடுத்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால்  உடல் நிலை சற்று குணமடைந்து போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சை முடிந்தாலும், அலுவல் பணிகளை தொடர முடியாது என மருத்துவர்கள் தகவல்.  

Published by
மணிகண்டன்

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

8 seconds ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

56 minutes ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

1 hour ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago