#BREAKING: ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிப்பதற்கு சீனா எதிர்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடை ஒருதலைப்பட்சமானது என கூறி சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.

குறிப்பாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்து வருகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை ரஷ்யாவில் உள்ள 27 தனிநபர் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு விதமான தடைகளை விதித்திருக்கின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட வங்கிகளில் அவர்கள் பரிவர்த்தனை செய்யவோ, நிதி உதவி பெறவோ முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா மீது தொடர்ந்து அறிவிக்கப்படும் தடைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து ரஷ்யாவிற்கு நட்பு நாடாக விளங்கி வரும் சீனா, ரஷ்யா மீது இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது சீனா.  முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவு அளித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago