பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில்,இறுதியாக ட்விட்டரில் 100 சதவீத பங்குகளை சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார்.
இந்நிலையில்,கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் கூறியதாது:”அடுத்து நான் கோகைனை மீண்டும் உள்ளே வைப்பதற்காக கோகோ கோலாவை வாங்குகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,”சுதந்திரமான பேச்சு” என்பதன் மூலம், நான் சட்டத்திற்குப் பொருந்துவதைக் குறிக்கிறேன்.எனினும்,நான் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தணிக்கைக்கு எதிரானவன்.மக்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்க விரும்பினால்,அதற்கான சட்டங்களை இயற்றுமாறு அரசிடம் கேட்பார்கள்.எனவே,சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது.
அதே சமயம்,பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க ட்விட்டர் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும்.ஆனால்,ட்விட்டர் அவ்வாறு இருந்தால் தீவிர வலதுசாரிகளோ,இடது சாரிகளோ கோபம்தான் அடைவார்கள்.
இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் டிஎம்களில் சிக்னல் போன்ற என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்கும்,எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…