பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.
இந்த நிலையில் அந்த மர்ம நபர் குறித்து கால்துறையினர் விசாரணை செய்ததில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, நடிகர் ரஜினி, நடிகர் சூர்யா ஆகியோர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் கொடுத்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் புவனேஷை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…