வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய சீனாவின் தியான்வென் – 1 விண்கலம்!

Published by
Rebekal

சீனா அனுப்பிய தியான்வென் – 1 எனும் விண்கலம் தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என சீன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு தங்கள் ஆதிக்கத்தை விண்வெளியில் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதில் இந்தியா சந்திராயன் விண்கலத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி சற்று ஒரு படி மற்ற நாடுகளில் இருந்து முன்னேறி உள்ளது என்று கூறலாம். இந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் இந்த விண்கலத்தை சீனா நுழைத்தது. ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் மொத்தம் 240 கிலோ எடை கொண்ட நிலையில், இந்த ரோவர் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என சீனா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலம் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்து அனுப்பும் எனவும், செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களை எடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் தன்மை, நீர் ஆகியவற்றை இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்து அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

42 minutes ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

42 minutes ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

3 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago