சீனா அனுப்பிய தியான்வென் – 1 எனும் விண்கலம் தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என சீன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு தங்கள் ஆதிக்கத்தை விண்வெளியில் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதில் இந்தியா சந்திராயன் விண்கலத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி சற்று ஒரு படி மற்ற நாடுகளில் இருந்து முன்னேறி உள்ளது என்று கூறலாம். இந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் இந்த விண்கலத்தை சீனா நுழைத்தது. ரோவர் கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் மொத்தம் 240 கிலோ எடை கொண்ட நிலையில், இந்த ரோவர் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என சீனா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலம் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்து அனுப்பும் எனவும், செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களை எடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் தன்மை, நீர் ஆகியவற்றை இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்து அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…