உடல் எடையை குறைக்கும் பேரிக்காயின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய ஆப்பிள் வகையைச் சேர்ந்த பேரிக்காய் அதிக அளவு சத்து கொண்டது. இதில் புரதம், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின் ஆகிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பேரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பேரிக்காயின் நன்மைகள்

நார்ச் சத்து அதிகம் நிறைந்து உள்ளதால் இந்த பேரிக்காய் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன், இதில் உள்ள பிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் காரணமாக இன்சுலின் அளவை உடலில் மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் வராமலும், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இந்த பேரிக்காயில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் காரணமாக எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் வாரம் இருமுறை இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராக மாறுவதுடன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் உடலில் அதிகம் இருக்கும்.

மேலும் அஜீரண கோளாறுகளை போக்குவதில் பேரிக்காய் மிகவும் அதிக ஆற்றல் கொண்டது. குடல் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன் பேரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது மன இறுக்கம் மற்றும் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். வைட்டமின்கள் மற்றும் புரதசத்து காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மையை இது கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க, பற்களுக்கு உறுதியை அளிக்க, மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கும் சீரான உடல் நிலையை கொடுக்க இது உதவுகிறது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

Published by
Rebekal

Recent Posts

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

1 minute ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

21 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

2 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago