மாஸ்டர் மீது அதீத நம்பிக்கையில் தளபதி விஜய்.! எந்த வழியில் படம் வெளியாகவுள்ளது தெரியுமா?!

Published by
மணிகண்டன்

மினிமம் கியாரண்டி அல்லாமல், டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியாக உள்ள முதல் விஜய் படம் மாஸ்டர் தான். இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்தாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இம்மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த திரைப்படம் மாஸ்டர். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலில் வந்து தமிழ் சினிமா, இந்திய சினிமா தாண்டி உலக சினிமாவை புரட்டி போட்டுவிட்டது.

இதனால் இந்த லாக்டவுன் பிரச்சனைகள் எப்போது முடியும், திரையரங்கு எப்போது திறக்கப்படும், மக்கள் பயமின்றி திரைக்கு சகஜமாக வரப்போவது எப்போது என திரைதுறை கலைஞர்கள், தியேட்டர்காரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் படமென்றால் அது எப்போதும் மினிமம் கியாரண்டி என்ற முறையிலேயே வெளியாகும். அதாவது, படத்தை ஒரு தொகைக்கு விற்றுவிடுவார்கள் அதன் பிறகான லாப, நஷ்டம் தயாரிப்பாளரை சாராது. படத்தை வாங்கிய விநியோகிஸ்தர், தியேட்டர்காரர்களையே சாரும்.

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை, தியேட்டருக்கு மக்கள் அனைவரும் வருவார்களா என்கிற பிரச்சனை என இருப்பதால், மாஸ்டர் படத்தை மினிமம் கியாரண்டி முறைப்படி இல்லாமல் டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியிட விநியோகிஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம். இந்த முறைப்படி படத்தின் லாப நஷ்டத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கிருக்கும்.

இந்த முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டால், டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியாக உள்ள முதல் விஜய் படம் மாஸ்டர் தான். இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் தோலிவியடைந்தால் அதன் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதாகவும் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் மீது விஜய் அதீத நம்பிக்கை வைத்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago