தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவர் அவ்வப்போது படப்பிடிப்புக்கு வருவதில்லை என புகார்கள் வருவது புதிதல்ல. இவர் தற்போது கன்னடத்தில் ஹிட் ஆன முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது.
அதாவது, சிம்பு தற்போது படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவில்லை எனவும், இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இதே போல ஒரு புகாருக்காக, சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…