isrel war - congress committee meeting [File Image]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து 4வது நாளாக நடந்து வரும் போருக்கு மத்தியில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
காசா பகுதியில் நுழைந்துள்ள ஹமாஸ் குழு, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் குறைந்தது 700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேலின் எதிர்த்தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மூன்று நாட்கள் கடந்த நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 தாண்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசைக்கப்பட்ட நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் வெடித்துள்ள போரின் விளைவாக, 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
தங்களது நிலத்தை பாதுகாப்பது, சுயாட்சி செய்வது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வது உள்ளிட்டவை பாலஸ்தீனர்களின் உரிமை என்ற எங்களது நீண்டகால ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…