கென்யாவில் கொரோனா பரவல் எதிரொலி…. 4 இலட்சத்து 7ஆயிரம் அகதிகள் இருப்பிடங்களை விட்டு வெளியேற தடை…

Published by
Kaliraj
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த  4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது வரை கென்யாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள்  இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கென்யா நாட்டில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கென்யாவில் 390க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள  முகாம்களில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கென்யாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் இரண்டாயிரம் அகதிகளை மட்டுமே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க  முடியும். மேலும்  110 பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இந்த முகாம்களில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் அகதிகளும் தங்களது வசிப்பிடத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்று கென்ய உள்துறை மந்திரி பிரெட் மடியாங்கி தடைவிதித்து  உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கென்யாவில், கடந்த 22-ந் தேதி முதல் 3 வார காலத்திற்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Kaliraj

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

60 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago