கென்யாவில் கொரோனா பரவல் எதிரொலி…. 4 இலட்சத்து 7ஆயிரம் அகதிகள் இருப்பிடங்களை விட்டு வெளியேற தடை…

Published by
Kaliraj
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த  4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது வரை கென்யாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள்  இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கென்யா நாட்டில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கென்யாவில் 390க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள  முகாம்களில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கென்யாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் இரண்டாயிரம் அகதிகளை மட்டுமே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க  முடியும். மேலும்  110 பேருக்கு மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள் உள்ளன. இதனால் இந்த முகாம்களில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் அகதிகளும் தங்களது வசிப்பிடத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்று கென்ய உள்துறை மந்திரி பிரெட் மடியாங்கி தடைவிதித்து  உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கென்யாவில், கடந்த 22-ந் தேதி முதல் 3 வார காலத்திற்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Kaliraj

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago