அதிர்ச்சி தகவல் ! ரூபாய் நோட்டுகள், மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் கொரோனா..!

Published by
Castro Murugan

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, ஆஸ்திரேலிய நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ(CSIRO) நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் “மிகவும் வலுவானது” என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாம் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்களில் கொரோனா வைரஸ்  28 நாட்களுக்கு உயிர்வாழக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையானது 50% ஈரப்பதத்துடன் 20 , 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸ்களில்  எஃகு, கண்ணாடி, வினைல், காகிதம் மற்றும் பாலிமர் ரூபாய் நோட்டுகள் மற்றும் பருத்தி துணி ஆகியவற்றின் மேற்பரப்புகளில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் ஃப்ளு வைரஸை  விட கொரோனா வைரஸ்  நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என்று தெரிவித்துள்ளனர். ஃப்ளு வைரஸ் அதே சூழ்நிலையில் 17 நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் தற்பொழுது நடத்தப்பட்டுள்ள சோதனையில் கொரோனா 28 நாட்கள் உயிர்வாழமுடியும் என்று நிரூபணமாகியுள்ளது.

இந்த சோதனையானது 20 டிகிரி செல்சியஸ் மற்றும் அரை வெப்பநிலையில் இருட்டு அறையில் ( Dark Room ) வைத்து நடத்தப்பட்டுள்ளது, ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் மூலம் கொரோனா அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Castro Murugan

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

17 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

53 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago