சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவை மிரட்டியது. தற்போது கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது.
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்காததால் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டோர்தான் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் 9 வயது வரை குழந்தைகள் யாரும் இதுவரை கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
10-19 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
20-29 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
30-39-வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.2 % பேர் உயிரிழந்துள்ளனர்.
40-49- வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 0.4 % பேர் உயிரிழந்துள்ளனர்.
50-59- வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 1.3 % பேர் உயிரிழந்துள்ளனர்.
60-69 -வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 3.6 % பேர் உயிரிழந்துள்ளனர்.
70-79-வயது வரை உள்ளவர்களில் கொரோனாவால் 8.0 % பேர் உயிரிழந்துள்ளனர்.
80 வயதிற்கு மேற்பட்டோர்தான் கொரோனாவால் அதிகம் உயிரிழந்துள்ளனர். 80 வயதை தாண்டிய 14.8%உலகளவில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…