உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருமளவு மக்களை பாதித்து வருகிறது. இதுவரை உலகமுழுவதும் 4000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, இதுவரை அமெரிக்காவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாகவும். இதற்க்கு 50 பில்லியன் டாலரை கூட்டாட்சி நிதியிலிருந்து விடுவிப்பதாகவும் கூறினார். அப்பொழுது அவர் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிகச்சலால் 12,000 அதிகமானோர் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் இதுபோன்ற சோதனைகளை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஒபாமாவை விமர்சித்தார் .
மேலும் தற்போது உள்ள மருத்துவமனைகள் அவசரகாலங்களில் செயல்படுவதை போன்று செயல்படும் என்றும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை நடத்தவும், அனைத்து இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கவும், சோதனை மையங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வலைதளத்தை உருவாக்குமாறு கூகுள் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா காரணமாக அமெரிக்காவில் 13 விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…