190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்- ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • லண்டனில் ரெய்ன்ஹார்ட் சினாகா என்பவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து, வந்ததால் அவரை கைது செய்யப்பட்டு, இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
  • இவர் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம்.

இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும் 2012-ல் புவியியலில் முனைவர் பட்டம் பெற லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், லண்டனில் இவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்தது, மட்டுமன்றி அவர்களை சித்தரவதை செய்த வீடியோ மூலம் போலீசார் உடனடியாக அவரை கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் மான்செஸ்டர் நகரில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் சினாகாவை வெளியில் விட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும் எனக் கருதி பல சோதனைகளுக்குப் பின் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் அதிக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இதுவே எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவர் 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதில் 70 பேர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளனர், போலீஸார் மற்றவர்களை தேடி வருகின்றனர். அந்த கொடூரன் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம்.

மேலும், அவர்களுக்கு மது கொடுத்து போதையாக்கிவிட்டு அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதாகத் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை அவர்களும் போதையின் களைப்பு என நினைத்துக் கொள்வார்களாம். நியூயார்க் டைம்ஸ் செய்தி படி 2017-ம் ஆண்டு 18 வயது இளைஞரை வன்புணர்வு செய்த போது போதையில் இருந்த இளைஞர் திடீரென எழுந்து பார்க்க அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி வந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே சினாகாவின் குற்றச் செயல்கள் தெரியவந்தது, இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

26 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago