இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும் 2012-ல் புவியியலில் முனைவர் பட்டம் பெற லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், லண்டனில் இவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்தது, மட்டுமன்றி அவர்களை சித்தரவதை செய்த வீடியோ மூலம் போலீசார் உடனடியாக அவரை கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் மான்செஸ்டர் நகரில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் சினாகாவை வெளியில் விட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும் எனக் கருதி பல சோதனைகளுக்குப் பின் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் அதிக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இதுவே எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவர் 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதில் 70 பேர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளனர், போலீஸார் மற்றவர்களை தேடி வருகின்றனர். அந்த கொடூரன் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம்.
மேலும், அவர்களுக்கு மது கொடுத்து போதையாக்கிவிட்டு அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதாகத் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை அவர்களும் போதையின் களைப்பு என நினைத்துக் கொள்வார்களாம். நியூயார்க் டைம்ஸ் செய்தி படி 2017-ம் ஆண்டு 18 வயது இளைஞரை வன்புணர்வு செய்த போது போதையில் இருந்த இளைஞர் திடீரென எழுந்து பார்க்க அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி வந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே சினாகாவின் குற்றச் செயல்கள் தெரியவந்தது, இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…