டெல்லி விவசாயிகள் போராட்டம் கவலை அளிப்பதாக உள்ளது – கனடா பிரதமர்!

Published by
Rebekal

டெல்லியில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெறக்கூடிய போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகவும் கனடா பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை காணொளி மூலமாக பகிர்ந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்த விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் நடை பெறக்கூடிய விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகள் குறித்து அதிகம் கேள்விப்படுகிறேன்.

அவர்களின் நிலைமை வருத்தமளிக்கும் வண்ணமாக உள்ளது என தெரிவித்த அவர், தங்களது உரிமைகளுக்காக போராடக்கூடிய விவசாயிகளை பாதுகாக்க கனடா எப்பொழுதும் துணை நிற்கும் எனவும் விவசாயிகள் குறித்த கவலை இந்திய அரசுக்கு பல வழிகளில் தாங்களும் தெரிவித்து வருவதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய இந்த நேரத்தில் விவசாயிகள் நடைபெறக்கூடிய போராட்டத்தை இந்தியாவில் கவனிக்காமல் விட்டால் நான் கடமை தவறியதாக மாறி விடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலைவராக இருந்தாலும் இந்தியாவில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது பல விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

5 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

51 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago