டெல்லியில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெறக்கூடிய போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகவும் கனடா பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை காணொளி மூலமாக பகிர்ந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்த விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் நடை பெறக்கூடிய விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகள் குறித்து அதிகம் கேள்விப்படுகிறேன்.
அவர்களின் நிலைமை வருத்தமளிக்கும் வண்ணமாக உள்ளது என தெரிவித்த அவர், தங்களது உரிமைகளுக்காக போராடக்கூடிய விவசாயிகளை பாதுகாக்க கனடா எப்பொழுதும் துணை நிற்கும் எனவும் விவசாயிகள் குறித்த கவலை இந்திய அரசுக்கு பல வழிகளில் தாங்களும் தெரிவித்து வருவதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய இந்த நேரத்தில் விவசாயிகள் நடைபெறக்கூடிய போராட்டத்தை இந்தியாவில் கவனிக்காமல் விட்டால் நான் கடமை தவறியதாக மாறி விடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலைவராக இருந்தாலும் இந்தியாவில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது பல விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…