நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது.
இதனால் தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் நானே வருவேன். ஏனெனில் செல்வராகவன் – தனுஷ் -யுவன் கூட்டணி என்பதால். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ், அடுத்ததாக ஒரு திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் டிவி ராமர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து ரோபோ சங்கர் கூறியது ” தனுஷ் சார் இயக்கத்தில் ராமர் ஐயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..நானும் அவருடன் நடிக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகர் தனுஷ், பா.பாண்டி என்ற படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற படத்தை இயக்கிருந்தார். அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…