நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களைடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் உள்ள கோரேகான் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சந்தீப் நஹர் தனது வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ,தனது தொழில்துறை பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தனது இந்த முடிவிற்கு மனைவியை குறை கூற கூடாது என்றும் வீடியோவில் கூறியுள்ளார்.ஒரே படத்தில் நடித்த இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகரின் தற்கொலைக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…