காலை உணவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். ஏனென்றால் காலை நேர உணவை தவிர்ப்பதன் மூலமாக உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே தான் காலை நேரத்தில் ராஜா போல சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள்.
வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது அவசரமான ஏதாவது ஒரு காரணங்களைக் கூறி காலை உணவை தவிர்ப்பது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதே சமயம் அவசரமான நேரம் என்பதற்காக காலையில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம் என்று கிடையாது, காலை நேரத்தில் சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தக்காளி நமது ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு மிகவும் உகந்தது. ஆனால் இந்த தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் இருக்க கூடிய நேரத்தில் சாப்பிட கூடாது. ஏன் என்றால் இந்த தக்காளியில் அமிலத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக நமது வயிற்றில் புண்கள் ஏற்படுவதுடன், வயிற்று வலி ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.
குளிர்பானம் அதிக அளவில் அமில தன்மை கொண்டது. எனவே இது நமது உடலின் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. எனவே வெறும் வயிற்றில் இந்த குளிர்பானங்களை உட்கொள்ளும் பொழுது, வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து, கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்புண்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
காலை நேரத்தில் காய்கறிகளையும், பழங்களையும் வைத்து சாலட் செய்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதை வெறும் வயிற்றில் உட்கொள்வது தவறு. இது நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். நமது செரிமானத்தை பாதிக்கும். எனவே காலையில் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகம் ஏற்படுவதற்கு காரணமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…