செய்தித்தாளில் உணவை வைத்து சாப்பிட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா….?

Published by
Rebekal

ரோட்டோர கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி அதிகமாக செய்தி தாள்களில் தான் எண்ணெய் உணவுகள் வைத்து தருகிறார்கள். அவ்வாறு செய்தி தாள்களில் உணவுகளை வைத்து கொடுப்பதைப் நாம் பார்த்திருப்போம். ஏன் நாமே அவ்வாறு சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த செய்தி தாளில் உணவை உண்ணும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?

அந்த செய்தித்தாளில் உள்ள மை நமது உணவில் படுகிறது. இந்த உணவை நாம் உண்ணுவதால் நமக்கு பல நோய்களை ஏற்படுத்தும். இந்த இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாகி நாளடைவில் நமது ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய ஒன்றாக மாறும்.

அதுமட்டுமால்லாமல் செய்தித்தாள் கொண்டு மூடப்பட்ட உணவு நமது ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமே உறுதிப்படுத்தி உள்ளதாம். இவ்வாறு செய்தி தாளால் மூடப்பட்ட உணவை சாப்பிடுவது மூலமாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

செரிமான உறுப்பு

செய்தி தாளில் பயன்படுத்தப்படும் மை காரணமாக நமது உணவில் அந்த இரசாயனங்கள் ஒட்டி கொள்ளும். இந்த இரசாயனங்கள் கலந்த உணவை நாம் சாப்பிடும் பொழுது நமது செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.

ஹார்மோன்கள்

செய்தி தாளில் பயன்படுத்தப்படும் மை காரணமாக நமது ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் நமது ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு உண்டாகி பல நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

புற்றுநோய்

செய்தி தாளில் அச்சிடப் பயன்படும் மை உலறுவதற்காக ஒரு இரசாயனம் பயன்படுத்தப்படுமாம். இந்த இரசாயனம் நமது உடலுக்குள் செல்லும் பொழுது சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரலில் புற்றுநோயை உருவாக்குவதற்கான அபாயம் உள்ளதாம்.

கருவுறுதல்

பெண்கள் இந்த செய்தி தாளால் மூடப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் பொழுது அதிலுள்ள இரசாயனம் காரணமாக அவர்களின் கருவுறுதல் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

41 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

15 hours ago