ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
படத்திற்கு ஆர்சி தாற்காலிகமாக 15-என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகை கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை கியாரா அத்வானிக்கு, ரூ. 5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…