சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள தனது 40-வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40-வது படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் .இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 40-வது படத்தினை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.அதாவது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் ,அதனை ஒரே கட்டமாக ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதன் பின் படத்தினை சுதந்திர தினத்தை முன்னிட்டோ அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டோ வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை முடித்த பின்னர் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் , சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…