நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையில்லை என்று ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கமளித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் , சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ,அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது . தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங்,நான் நடிகரை காதலிப்பதாக வெளிவந்த தகவல் வதந்தி என்றும்,எனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் தனியாகவே வசித்து வருவதாகவும் ,எனது திருமணம் எப்போது நடந்தாலும் திருவிழா போன்று கொண்டாடப்படும் என்று கூறி அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.இதிலிருந்து இவர் காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது .
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…