மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி வரலாற்று சாதனை படைத்த மருத்துவர்கள்..! எந்த நாட்டில் தெரியுமா…?

Published by
லீனா

அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். 

பொதுவாகவே மனிதர்களின் உறுப்பு செயலிழக்கும் போது, அந்த உறுப்பை மாற்ற வேண்டுமெனில் மீண்டும் மனிதர்களின் ஒருஉறுப்பை தான் பொருத்துவது உண்டு. அதற்கு மாறாக அமெரிக்காவில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற நபரின் உயிரை காப்பாற்ற மாற்று இருதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்துவதற்கு தகுதியற்ற நிலையில்  காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.

கடந்த புத்தாண்டையொட்டி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பன்றியின் இதயத்தை பொருத்த அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயத்தை பொருத்தி உள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டேவிட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பன்றியின் உறுப்புகளை மனித உடல் ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

3 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

4 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

6 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

8 hours ago