எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
கிலியட் சைன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது 15 நாட்களாக இருந்த கொரோனா சிகிச்சை 10 நாளாக குறைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆராய்ச்சி அமைப்பானது 1,063 கொரோனா நோயாளிகளை கொண்டு ஆய்வு நடத்தியது. அதில், சிலருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்களுக்கு வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…