கொரோனாவிற்கு முடிவு..உலகம் கனவு காண ஆரம்பிக்கட்டும்.. டெட்ரோஸ்..!

Published by
murugan

தொற்றுநோய் குறித்த ஐ.நா பொதுச் சபையின் முதல் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா தடுப்பூசி சோதனைகள் பாசிட்டிவ் முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளதால், கொரோனாவிற்கு முடிவுக்கு வர வேண்டும் என்று உலகம் கனவு காண ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், வைரஸை நாம் அழிக்க முடியும். ஆனால் அதற்கான பாதை ஆபத்தானது மற்றும் நம்பமுடியாதது. கொரோனா காலம் மனிதகுலத்தின் நல்ல மற்றும் கெட்ட பக்கத்தை நமக்குக் காட்டியது. கொரோனா காலத்தில், அனுதாபம் மற்றும் தன்னலமற்ற தன்மை செயல்களையும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அற்புதமான சாதனைகளையும் நாங்கள் கண்டோம், ஆனால் அதே நேரத்தில் சுயநலம், பழி மற்றும் கருத்து வேறுபாடு பற்றி பார்த்தோம் என டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

நோயின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நாடுகளை அவர் குறிப்பாக குறிப்பிடவில்லை. தடுப்பூசி வசதி தனியார் சொத்தாக பார்க்கப்படாமல் உலகம் முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதற்கும், கொரோனா நெருக்கடியின் முடிவை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்பதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கிறது. இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அடுத்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago