வாள் வைத்து கேக் வெட்டிய பிரபல நடிகர்! போலீசார் வழக்குப்பதிவு!

Published by
லீனா
  • வாள் வைத்து கேக் வெட்டிய பிரபல நடிகர்.
  • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20 தேதி பிறந்தநாள். இதனையடுத்து, 19-ம் தேதி நள்ளிரவில், பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

அந்த பிறந்தநாள் விழாவின் போது, அவர் கேக்கை வாள் வைத்து வெட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து இவ்வாறு செய்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் நடிகர் துனியா விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நீண்ட வாள் பயன்படுத்தியது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கோரி நடிகர் துனியா விஜய்க்கு கிரிநகர் போலீசார் நோட்டிஸ் அனுப்பி இருந்தனர். அதன்பேரில், நடிகர் துனியா விஜய், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும், அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி நடிகர் துனியா விஜய் மீது கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

36 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago