உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா களமிறக்கவுள்ளது.! – அந்நாட்டு சுகாதாரத்தை அமைச்சர் தகவல்.!

Published by
மணிகண்டன்

ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். – ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வேலைகள் பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக விரிவடைந்து வருகிறது. இதில் யார் முதலில் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை களமிறக்க உள்ளார்கள் என உலகமே எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த காமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்தை மனித சோதனைக்காக உட்படுத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறுகையில், ‘ ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு நாட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும். தடுப்பு மருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

59 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago