ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். – ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வேலைகள் பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக விரிவடைந்து வருகிறது. இதில் யார் முதலில் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை களமிறக்க உள்ளார்கள் என உலகமே எதிர்நோக்கி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த காமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்தை மனித சோதனைக்காக உட்படுத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறுகையில், ‘ ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு நாட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும். தடுப்பு மருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…