ஏப்ரல் மாதத்தை குறிவைத்த சூர்யா… வாடிவாசல் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

Published by
பால முருகன்

சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குனர் வெற்றி மாறன் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி தற்போது வரை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏனெனில் இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருவதால் சூர்யாவின் படத்தை தற்போது இயக்க வாய்ப்பில்லை. அதைபோல் நடிகர் சூர்யாவும் தனது 40 வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதால் அவரும் பிசியாக உள்ளார்.

இதனால் சூர்யா தனது 40 வது திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்தாக நவராசா என்ற வெப் தொடரில் நடித்துமுடித்துவிட்டு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்
Tags: vaadiVasal

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

3 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

38 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 hour ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

2 hours ago