இன்று முதல் கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்.!

Published by
Ragi

கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பெங்களூரில் ஆரம்பமாகி உள்ளது.

கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஆனந்த் நாக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சஞ்சய் தத்தின் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் படப்பிடிப்புக்கான அனுமதியை வழங்கியதை அடுத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ள முதல் தென்னிந்திய படமாக கே. ஜி. எஃப் 2 உள்ளது. ஆம் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கவுள்ளது. இதில் கிளைமாக்ஸ் ஃபைட் காட்சியை தவிர 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago