கே. ஜி. எஃப் – 2 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பெங்களூரில் ஆரம்பமாகி உள்ளது.
கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஆனந்த் நாக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சஞ்சய் தத்தின் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அரசாங்கம் படப்பிடிப்புக்கான அனுமதியை வழங்கியதை அடுத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ள முதல் தென்னிந்திய படமாக கே. ஜி. எஃப் 2 உள்ளது. ஆம் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கவுள்ளது. இதில் கிளைமாக்ஸ் ஃபைட் காட்சியை தவிர 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…