தீராத கண் திருஷ்டி விலக..!பொல்லாத பார்வையிலிருந்து விடுபட..!இந்த கயிற்றை கட்டிக்கொள்ளுங்கள்..!

Published by
Sharmi

தீராத கண் திருஷ்டி விலகுவதற்கு எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

சிலருக்கு கண் திருஷ்டி காரணமாக பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் சிலரது பார்வை ஒருசிலரின் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இருக்கும் பொல்லாத பார்வையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கருப்பு கயிறு அணியலாம்.

சிலர் கருப்பு கயிற்றினை கை, கணுக்கால், இடுப்பு அல்லது கழுத்தில் கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்படி அணிவதன் மூலமாக கண் திருஷ்டி நம்மிடம் இருந்து விலகும். பொதுவாகவே, கருப்பு நிறம் சுப நிகழ்ச்சிகளில் அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. பலரும் அந்த நிற உடையை அணிவதை தவிர்ப்பதை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட இந்த கருப்பு நிற கயிற்றை மற்றவர் பார்வையில் படும்படி அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்குரிய நிறம்.

ஒவ்வொருவரும் அவரவர்களது வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமையை அடைவர். மனதில் இருக்க கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க இந்த கருப்பு கயிறு பயன்படுகிறது. இந்த கயிற்றை எப்படி அணிந்து கொள்ள வேண்டும், எப்போது அணிய வேண்டும் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். இதனை அணிவதற்கு முன்னர் சனீஸ்வர பகவானின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கட்டுவது சிறப்பாகும்.

மேலும், அணியும் பொழுது ஆஞ்சநேயர் மற்றும் துர்காதேவியை மனதார நினைத்து கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் கூறி அணிவதன் மூலமாக அந்த கயிற்றின் சக்தி அதிகரிக்கும். இந்த கயிற்றை சனிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணியளவில் கட்ட வேண்டும். காலில் அணிகிறீர்கள் என்றால் வலது புற கணுக்காலில் மட்டுமே அணிய வேண்டும். இவ்வாறு கட்டிக்கொள்ளும் இந்த கருப்பு கயிறு மூலமாக உங்களது மேல் படும் பொல்லாத பார்வை அனைத்தும் விலகி விடும். மேலும், இதனால் தொழிலிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

7 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

8 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

11 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago