இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்காக மிக பெரிய முயற்சியில் பிரம்மாண்ட பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜி.வி.பிரகாஷ் இசையில், தமிழகர்களின் தியாகம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமைகளை உள்ளடக்கிய பாடல் உருவாகவுள்ளது. ஏ.ராஜசேகர் இயக்கும் இந்த பாடலை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுகிறார்.
மிகப்பெரிய அளவு உருவாகும் இந்த பாடல் இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் எடுக்கப்படவுள்ளது. அவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி ஆகும்.
இந்த பாடலில் இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கு கொள்கின்றனர். மேலும் இப்பாடல் இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படமாக்கப்பட உள்ளது.
இந்த பிரம்மாண்ட பாடலுக்காக உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ கேன்வாஸ் பெயின்டிங், கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் என்ற தலைப்பில் உருவாகிறது. இதை இந்தியாவின் தலைசிறந்த 75 ஓவியர்கள் வரைய உள்ளனர். இதன் முதல் போஸ்டர் செப்டம்பர் 5 வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த பிரம்மாண்ட பாடலை அனைத்து திரையரங்கு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிட உள்ளனர்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…