வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஆகஸ்ட் 1ல் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘டேனி’ என்ற படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்பட்டது
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது.
போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. இந்த படத்தை ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…