வரலாறு முக்கியம் : தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று.!

Published by
பால முருகன்

இன்று, மே 7, இந்தியாவின் முதல் நோபல் விருது வென்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள். இவர் 1861-ஆம் ஆண்டு மே 7ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாரியில் தேபேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவிக்கு மகனாகப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவை உருவாக்கிய மாபெரும் புரட்சியாளர்களில் ரவீந்திரநாத் தாகூர் மிக முக்கியமானவர். தனது இலக்கிய படைப்புகள் மூலம் இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்பியவர். இந்திய நாட்டில் ஜன கன மன போல, இவர் எழுதிய பாடல் தான் வங்காள தேசத்திலும் தேசிய பாடலாக ஒலித்து கொண்டிருக்கிறது.

இசைக்கலைஞர், கவிஞர், நாடகாசிரியர், கல்வியாளர், ஓவியர், நாவலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டிருந்த தாகூர் பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர். இவர் கடந்த 1883 ஆண்டு மிருணாளினி தேவியை திருமணம் செய்துகொண்டார். 1902-இல் இவரது மனைவி மிருணாளினி தேவி மறைந்தார்.

1911-இல் இவர் இயற்றிய இசையமைத்த ‘பாரத பாக்ய விதாதா’ என்னும் வங்க மொழிப் பாடலின் முதல் சரணமே சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. கோரா, போஸ்ட் மாஸ்டர், சஞ்ஜாயிதா, கீதாஞ்சலி – போன்றவை மிகவும் புகழ்பெற்ற படப்பிப்புகளாக கருதப்படுகிறது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்பட பல வெளிநாட்டு, பல்கலைக்கழகங்கள் ரவீந்திரநாத் தாகூருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கியுள்ளன. 80- ஆண்டு நிறை வாழ்க்கைக்குப்பின் உடல்நலம் குறைவு காரணமாக தாகூர், 07.08.1941 அன்று மறைந்தார்.

Recent Posts

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

8 minutes ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

10 minutes ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

42 minutes ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

54 minutes ago

”இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்” – பிரதமர் மோடி விளக்கம்.!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…

1 hour ago

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

2 hours ago