ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் உலகளவில் 84 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் தாக்குகிறது. குறிப்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து, தனது பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உடுத்திசெய்யப்பட்டது. இதனால் அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 51 வயதாகும் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக நிமோனியா சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…