பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் அதற்கான
புரோமோ வீடியோவை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்ப உள்ளதாகவும், அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும்,போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த முறை டிக்டாக்கில் கவர்ச்சியில் ரசிகர்களை சூடேத்திய இலக்கியா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, வனிதா பிரச்சினைகள் மூலம் மீடியாக்களில் பிரபலமான சூர்யா தேவி, விஜய் டிவி தொகுப்பாளரான கோபி நாத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சுனைனா, ஷாலு ஷம்மு, அதுல்யா, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வில்லன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…