கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். அதன் பின்பு தக்காளி ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தொக்கு போல தயாரானதும் தேங்காய் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பாக கத்தரிக்காயின் காம்புகளை மட்டும் வெட்டி விட்டு நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காய் நன்கு பொரிந்து வந்ததும் அதே எண்ணெயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து லேசாக புளிக்கரைசல் சேர்த்து குழம்பு போல நன்கு கொதிக்கவிடவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…