தினமும் காலையில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். காலையிலேயே இட்லி செய்து சாப்பிடுவது தென் இந்தியர்களின் வழக்கமான உணவாக மாறிவிட்டது. இந்த இட்லியை எப்படி வித்தியாசமான முறையில், அட்டகாசமான சுவையில் தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ரவை மாவு : ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ரவை எடுத்துக் கொண்டு அதனுடன் தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சீரகம், மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
மாவு கலவை : தாளித்த பொருட்கள் அனைத்தையும் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்பு இட்லி தட்டில்இட்லி மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ரவா இட்லி வீட்டிலேயே தயார். நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள், அடிக்கடி செய்வீர்கள்.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…