சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி இருக்காது – மம்தா பானர்ஜி!

Published by
Rebekal

சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கியிருந்தால் இந்நேரம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி இருக்காது எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகமாக உள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணொளி வாயிலாக நேற்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களை தான் அதிகம் நடத்துவதாகவும், மத்திய அரசு கொரோனாவை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த நாடே தேர்தலை கவனித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மான் கி பாத்தில் மட்டும் பேசிவிட்டு அவர் வேறெங்கோ சென்று விடுகிறார். மேற்கு வங்க மாநிலத்துக்கு வரவேண்டிய ஆக்சிஜன் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறது.

சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் உத்திரப் பிரதேசம், அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்கள் எரிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், மேற்கு வங்க மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

12 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

40 minutes ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

47 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

2 hours ago