இன்ஸ்டாகிராமில் என்னை தடை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என கங்கானா தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் அந்த பதிவில், ‘மக்களே எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கொரோனா நோய்க்கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சம் மக்களை பயமுறுத்தி வருகிறது.’ என பதிவிட்டு இருந்தார்.
கங்கனா ரனாவத்தின் இந்த பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பக்கத்தில் மீண்டும் ஒரு நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘எல்லாரும் முதலாளித்துவத்துக்கு பலியாகிறார்கள். முழு தலைமுறை இளைஞர்களும், முதலாளித்துவம் மற்றும் நுகர்வோர் உண்ணப்படுகின்றனர். தேசத்துக்கும், அதன் நெருக்கடிக்கும், அவர்களின் அலட்சியமும் வெறுப்பும் திகிலூட்டும். இது மனிதனின் மதிப்பை, அசிங்கமாகவும், ஆழமற்றதாகவும், பயனற்றதாகவும் ஆக்குகிறது.
இந்த தளம் ஒருபோதும் என்னை ஈர்க்கவில்லை. இங்கிருந்து என்னை தடை செய்ய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது மரியாதைக்குரிய பேட்ஜாக இருக்கும். நான் திரும்பிப் பார்க்கும் போது, நான் பொருந்தவில்லை என்பதை நினைவில் கொள்வேன். நான் அவர்களை சங்கடப்படுத்தினேன். நான் கேள்விகளைக் கேட்டேன் என்பதை நினைவு கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அரசியல் சம்பந்தமான பதிவுகளை பதிவிட்டதால், அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…