ஐ.நா வில் விதியை மீறி தொடர்ந்து 45நிமிடம் பேசிய இம்ரான் கான் !

Published by
Vidhusan

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெற்ற ஐ.நா சபையின் 74வது பொதுக்கூட்டத்தில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று தங்களது சிறப்பான உரையாற்றினர். இந்நிலையில் இன்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இந்திய வளர்ச்சி, பருவநிலை மாற்றம் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

இதையடுத்து பேசத் தொடங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றங்களை சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இந்தியாவிடம் நட்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறினார்.

இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்தும் தீவிரவாத செயல்கள் குறித்தும் பல நிமிடங்களாக பேசிக்கொண்டே இருந்தார். இதனால் இம்ரான் கானுக்கு போதிய நேரத்தில் தனது உரையை முடிக்க தவறிவிட்டார். இவருக்கு முன்னர் பேசிய தலைவர்கள் அனைவரும் 15 நிமிடங்களில் பேசி முடித்தனர். ஆனால் இம்ரான் கான் மட்டும் தனக்கென ஒதுக்கிய நேரத்திற்கும் அதிகமாக 45 நிமிடங்கள் வரை பேசினார்.

Published by
Vidhusan

Recent Posts

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

44 minutes ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

48 minutes ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

2 hours ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

3 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

4 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

4 hours ago