அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது என தனது உரையினை நிகழ்த்தினார்.
அதில் அவர் மேலும் கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு உறுதுணையாக இருந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய எந்த நாடும் பாகிஸ்தான் அளவிற்கு விமர்சனங்களை சந்தித்தது இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ‘ அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு ஷாகீத் என்றார். அதாவது அவரை தியாகி என கூறினார். அவரை நட்புநாடான அமெரிக்கா பாகிஸ்தான் உள்ளே வந்து எங்களிடம் சொல்லாமலே கொன்றது. அது பெரிய அவமானம் என குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, பல்லாயிரக்கனான உயிர்சேதத்திற்கு காரணமாயிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என இம்ரான் கான் , பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கூறியது பெரும்பாலோனரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…