இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் 30 நாட்கள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…