Afghan:ஐபிஎல் ஒளிபரப்ப தடை – தலிபான்கள் எச்சரிக்கை…காரணம் என்ன தெரியுமா?..!

Published by
Edison

ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.அதற்கான காரணம் இதுதான்.

உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது  தடை விதித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று தலிபான்கள் வலியுறுத்தியது.ஆனால்,அதற்கு மாறாக பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை மறுத்து வருகிறது.

அந்த வகையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் ஆண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.ஆனால்,பெண்கள் பெயரை இதில் குறிப்பிடவில்லை.

மேலும்,கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் புதிய விளையாட்டுத் தலைவர் பஷீர் அஹ்மத் ருஸ்தம்சாய் செய்தி நிறுவனமான AFP இடம் கூறியதாவது:”ஆப்கானிஸ்தானில் 400 விளையாட்டுகள் அனுமதிக்கப்படும்”, என்று கூறினார்.ஆனால் பெண்கள் ஒரு விளையாட்டையாவது விளையாட முடியுமா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.மேலும்,இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு ,”தயவுசெய்து பெண்களைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்காதீர்கள்” என்று  அவர் கூறினார்.

அதேபோல,தலிபான் செய்தித் தொடர்பாளர் முன்னதாக கூறுகையில்: “பெண்கள் அமைச்சர்களாக இருக்க முடியாது, அவர்கள் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும்”, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago