அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் விஜய், அஜித்குமார், ரஜினி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். ஆனால் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்து குண்டாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் குறைய துவங்கியது. அனைவரும் அவரது உடல் எடையை வைத்து கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போது அனுஷ்கா திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்புகள் குறைந்ததற்காக மட்டுமில்லாமல் திருமணம் நடக்காத விரக்தியில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். ஆனாலும் இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…