அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் விஜய், அஜித்குமார், ரஜினி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். ஆனால் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை அதிகரித்து குண்டாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் குறைய துவங்கியது. அனைவரும் அவரது உடல் எடையை வைத்து கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே தற்போது அனுஷ்கா திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்புகள் குறைந்ததற்காக மட்டுமில்லாமல் திருமணம் நடக்காத விரக்தியில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். ஆனாலும் இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…