ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ், ஹிட்லரின் உடலிலும் யூத இன ரத்தம் கலந்திருக்கலாம் எனபேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
கடந்த அறுபது நாட்களுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது ஒரு புதிய சர்ச்சையில் அவரை தள்ளியுள்ளது. ரஷ்யா பல வருடங்களாகவே உக்ரைன் அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியை குறித்து ஹிட்லரின் ஆட்சியோடு ஒப்பிட்டு பேசி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி இத்தாலிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் கூறுவது சரியா என்று தெரியவில்லை.
ஹிட்லரின் ரத்தத்திலும் யூத இனம் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார். இதன் காரணத்தினால் தற்போது யூதர்கள் அதிகம் இருக்க கூடிய நாடான இஸ்ரேல் கோபத்தில் இருக்கிறது. இதுவரை நடந்து வந்த போர் காலங்களில் இஸ்ரேல் அரசு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே சமாதானமாக பேசி வந்தது. தற்போது ஹிட்லரை யூதர்களோடு தொடர்பு படுத்தி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி பேசியது யூதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிட்லரின் ஆதரவாளர்கள் முன்பிலிருந்தே தெரிவித்துவந்ததாவது, யூதர்கள் அவர்களுக்குள் நடந்த உள்நாட்டு பிரச்சனை காரணத்தினால் தான் அவர்கள் அதிகமாக மரணமடைந்தார்கள் என்று விமர்சனம் செய்து வந்தது. இதனை ஏற்கும் வகையில் தற்போது செர்ஜி தெரிவித்துள்ளதாவது யூதர்களை அவமதிக்கும் செயல் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் யய்ர் லேப்பிட் தெரிவித்துள்ளார். இதுபற்றி சரியான விளக்கம் செர்ஜி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…