அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், எச் -1 பி உள்ளிட்ட விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடு வாரியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான வரம்பை அகற்றவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இவை இரண்டும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய நிபுணர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் சில குடியேற்றக்கொள்கைகளை இயற்றி உள்ளனர். இதனால், அமெரிக்காவில் ஏராளமான இந்திய குடும்பங்களை மோசமாக பாதித்தனர்.
இந்நிலையில், வெளிச்செல்லும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை ஜோ பிடன் மாற்றியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பார், இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 11 மில்லியன் புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம்.
ஜோ பைடன் தனது பிரச்சரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை வழங்கப்படும். மேலும், வேலை அடிப்படையிலான விசாக்கள் வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும் என கூறினார்.
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…