பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனம் ..!

Published by
murugan

பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனத்துக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டல் விடுத்தது. நீதிபதி ஆயிஷா நியமனத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் பரவாயில்லை, உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு முறை நியமிக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போனது. நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆதரவாக 4 பேர், எதிராக 4 பேரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில், நீதிபதி குல்சார் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதிதான் இது குறித்து முடிவெடுப்பார் என எதிர்ப்பாளர்கள் கூறினார். நீதிபதி ஆயிஷா, சீனியாரிட்டியில் நான்காவது இடத்தில் உள்ளதால், அவரை உச்சநீதிமன்றத்துக்கு முதலில் அனுப்புவது தவறு என்று பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.

இந்நிலையில், நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை  உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த 5 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது பாகிஸ்தானின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்க உள்ளார்.  நீதிபதி ஆயிஷா தற்போது லாகூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.

நீதிபதி ஆயிஷா நியமனம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.

 

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago