பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனம் ..!

Published by
murugan

பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனத்துக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டல் விடுத்தது. நீதிபதி ஆயிஷா நியமனத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் பரவாயில்லை, உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு முறை நியமிக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போனது. நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆதரவாக 4 பேர், எதிராக 4 பேரும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில், நீதிபதி குல்சார் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதிதான் இது குறித்து முடிவெடுப்பார் என எதிர்ப்பாளர்கள் கூறினார். நீதிபதி ஆயிஷா, சீனியாரிட்டியில் நான்காவது இடத்தில் உள்ளதால், அவரை உச்சநீதிமன்றத்துக்கு முதலில் அனுப்புவது தவறு என்று பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.

இந்நிலையில், நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை  உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த 5 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது பாகிஸ்தானின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்க உள்ளார்.  நீதிபதி ஆயிஷா தற்போது லாகூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.

நீதிபதி ஆயிஷா நியமனம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.

 

Published by
murugan

Recent Posts

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

4 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

21 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

57 minutes ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

1 hour ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago