19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கதிர். இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2002- ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் காதல் வைரஸ் .இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அடுத்ததாக கன்னடத்தில் ‘நான் லவ் ட்ராக்’ என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக இயக்குனர் கதிர் எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை.
மேலும் கதிர் இயக்கத்தில் வெளியான அணைத்து தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இவர்களது கூட்டணியில் வெளியான அணைத்து படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதனபடி அறிமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து படம் இயக்குனர் கதிர் படம் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…