கங்கனா ரணாவத் தான் தங்கியிருந்த ஓட்டலில் சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் -2 படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சையை முடித்த சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் .அதே ஹோட்டலில் நடிகை கங்கனா ராணவத்தும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்த நிலையில் சஞ்சய் தத் தான் தங்கியுள்ள ஓட்டலில் தான் உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட கங்கனா உடனடியாக சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் .
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா , ஐதராபாத்தில் நான் தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருப்பதை அறிந்தவுடன் இன்று காலை சஞ்சய் சாரை பார்க்க சென்றேன் .அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…