மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டின் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களிடையே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் முக்கிய நடிகர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா ரனாவத்,
‘சட்டத்திருத்தம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு நடிகர்கள் வெட்கப்படவேண்டும். அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என காட்டமாக கூறினார். மேலும், மக்களால் தான் அவர்கள் பெரிய நடிகர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் வைத்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுக்காமல் பயந்து ஒதுங்கினால், அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். ‘ என காட்டமாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் பதிவிடுவது மட்டுமே நடிகருடைய வேலையில்லை. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் தைரியமாக தங்கள் கருத்தையும் தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் முன் வர வேண்டும்.’ என்று கங்கனா தனது கருத்தை தைரியமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…